தேவையான பொருட்கள்:
செத்தல் மிளகாய் – 150 பி
பெருஞ்சீரகம் – 2 மே.க
மிளகு – ½ தே.க
கறிவேப்பிலை – 3 அலக்குகள்
ஏலக்காய் – 4
கறுவாத்துண்டுகள் – 1 தே.க
செய்முறை:
- எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்து, கழுவி, காய வைத்து எடுக்கவும்.
- மிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
- பெருஞ்சீரகம், மிளகு இவற்றை தாச்சியில் இட்டு, அதன் மேல் மிளகாயை இட்டு வறுக்கவும்.
- இடையிடையே கறிவேப்பிலை, கறுவா, ஏலம் இவற்றையும் சேர்த்து வாசனை வரக்கூடியதாக வறுத்துப் பொன்னிறமாகியதும் இறக்கிக் கொள்ளவும்.
- பின் ஆறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இது மணம்கமழும், சுவையான சரக்குத் தூள். உணவில் அல்லது குழம்புகளில் சுவையை கூட்ட பயன்படுத்தலாம்!
Leave a Reply