தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை – 10 (நன்கு பழுத்தது)
- மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு (சுமார் 2 மே.க)
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- பெருங்காயம் – சிட்டிகை
செய்முறை:
• எலுமிச்சைகளை நன்கு கழுவி, துண்டுகளாக நறுக்கவும்.
• உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து, கண்ணாடி போட்டு மூடி, 3–4 நாட்கள் வெயிலில் ஊறவைக்கவும்.
• இடையே ஒரு முறை கிளறி விடவும்.
• வெந்தயத்தை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மிளகாய் தூள், பெருங்காயம், வெந்தயப்பொடி சேர்த்து கிளறவும்.
• இப்போது ஊற வைத்த எலுமிச்சையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
• நன்கு குளிர்ந்ததும் சுவைக்கத் தயாரான எலுமிச்சை ஊறுகாய்.
Leave a Reply