நல்லூர் மேளாய் கண்ணகி அம்மன் ஆலயம்

Posted on

by

selai

நல்லூர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக்கோயில் நான்கு சந்ததிக்கு முன்பே தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. ஊர் பெரியவர் ஒருவருக்கு கனவின் வாயிலாக ஒரு இலுப்பை மரத்தின் கீழ் பிரம்பு, பூக்கோட்டான், சிலம்பு இருப்பதாக அம்மன் தரிசனம் காட்டினர். மறுநாள் பெரியவர் சென்று பார்த்தபின் அவ்விடத்தில் மடாலயம் கட்டப்பட்டது.

இவ்வாறு தோற்றம் பெற்ற இவ்வாலயத்தில் தீமிதித்தல் முக்கிய நிகழ்வாகும். மழையை பெறுவதற்காக, நிறுத்துவதற்காக சீலையில் காசினை முடிந்து ஒரு பானையால் மூடி நேர்த்தி செய்து பலனை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *