மண்ணித்தலை சிவன் ஆலயம்

Posted on

by

சோழர் ஆட்சிக் காலத்தில் வட இலங்கையில் அரச தலைநகரங்களாக விளங்கிய மைக்கான சிறந்த துல்லிய சான்றாக மண்ணித்தலை சிவன் ஆலயம் விளங்குகிறது. இவ்வாலயம் பெருமளவு இடிந்த நிலையில் காணப்பட்டாலும் அக்கால கலைமரபை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.

இங்கு லிங்கத்தையும், சூலத்தையும் தெய்வச் சின்னங்களாக கொண்டமைந்துள்ளது. இதனை விநாயகர் ஆலயமாகவே இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கோறல்கல், செங்கல், சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் 21 அடி நீளத்தையும் 12 அடி அகலத்தையும் மூன்று தளங்களைக் கொண்ட 7 அடி உயரமான விமானத்தையும் கொண்ட சிறிய ஆலயமாகும். இதன் தேவகோஸ்டங்கள், கர்ணக் கடகள், குதம், சாலை, பஞ்சரம் என்பன அப்படியே சோழக்கலை மரபை ஒத்ததாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *