பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த திரு.தவராசா செல்லக்குமார்.
வடமராச்சி கரவெட்டியில் 1988.03.15 இல் பிறந்த செல்வா,இனியவன் என அழைக்கப்படும் செல்வக்குமார் தற்போது மலையாளபுரம் தெற்கு,மலையாளபுரத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். யாழ்ப்;பாண பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தற்போது ஆசிரியராக இருக்கும் இவர் கவிதை ,சிறுகதை,கட்டுரைகள், நாடக நெறியாக்கம் என ஈழத்து இலக்கிய பரப்பில் வலம்வருகின்றர்.சிறந்த இலக்கிய விமர்சகரும்,மேடை பேச்சும் ஏனைய தேர்ச்சி பெற்ற துறைகளாகும்.
அடங்காப்பறவை,மாற்றத்தை நோக்கி,ஈழக்கோன் போன்ற நாடகங்களும் அடங்காப்பறவை கவிதைத்தொகுதியும் வெளியிட்டுள்ளார்.பத்திரிகைகள்,வானொலிகள் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.
இவரது கலைச்சேவையினை கௌரவப்படுத்தும் முகமாக கிளிநொச்சி மாவட்டச்செயலகம் கலைக்கிளி விருது (2022) வழங்கி கௌரவித்தது.
Leave a Reply