
இவ்வாலயம் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்து தலயாத்திரையாக வருகை தந்திருந்த குழுவினரை சேர்ந்த சித்தர் ஒருவரால் கட்டப்பட்டதாக ஐதீகம் இருந்து வருகிறது. பூவரசங்குளம் என்ற குளத்துக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக மருது, வேம்பு என்பன காணப்படுகின்றன.
இவ்வாலயத்தின் ஆரம்பம் பிரித்தானியர் காலத்துக்கு முன்னதாக இருக்கும் என நம்பப்படுகிறது. சுண்ணாம்பினால் ஆன கட்டிடம் காணப்படுகிறது. மூலஸ்தானத்தில் வேல் அமைந்துள்ளது. இவ்வேலானது நல்லூர் கந்தசாமி கோவிலின் பீடத்தில் உள்ள வேலுடன் ஒத்ததாக காணப்படுவதால் நல்லூர் கந்தசாமி கோவிலுடன் தொடர்பு நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது.

Leave a Reply